நீதானே..
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே!
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே!
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே!
சில நினைவுகள் நினைவுகள் தான் மூள்கா மூள்காதே!
நீதானே.. நீதானே.. என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே.. நீதானே.. என் இமைகளை நீவினாய்
நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
என் விழியின் கறுமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே!
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே!
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே!
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே!
உன்மைகள் சொல்வதும்
உண்ர்ச்சியை கொள்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே…….
நீ தேட தேட ஏன் தொலைகிறாய்?
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்!
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்.
இதய சதுக்கம் நடுங்குதே!
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே!
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே!
ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே…….
படம் – சர்வம்
வினோதம்

நீ பேசிகொண்டே இருந்தாய்
அலுப்பாய் இருந்தது
என்று முடிப்பாய் என எண்ணிய
போழ்தில் நீ முடித்தாய்
எழுந்து நடந்து சென்றேவிட்டாய்
உன் ஓசை அடங்கியது மகிழ்வையும் தரவில்லை
உன் பிரிவின் சுவடுகள் சோகத்தையும் தரவில்லை
எப்படியோ இருக்கிறது எனக்கு..
கால்கள்

நீ இருக்கும் திசை என் கால்கள் அறியவில்லை
அறிந்தால்,
வாழும் நாள் வரை உன் திசை நோக்கி நடக்கும்.
நீ சொல்லும் சொற்களை இந்த செவி கேட்கவில்லை
கேட்டால்,
உன் வார்த்தை கேட்க ஓராயிரம் முறை தொலைபேசும்.
நீ பார்க்கும் பார்வை இந்த கண்கள் பார்க்கவில்லை
பார்த்தால்,
உன் பார்வை சந்திக்கவே ஓர் நாள் முழுதும் தவமிருக்கும்.
சந்திப்பு

கவிதைகள் தோன்றுகிறதே!!!
கவிதைக்கான பொருளாய் நீ இருக்கிறாய்.
ஆனால்..
கவிதையை சந்திக்கும் என்னால்
உன்னை சந்திக்க முடியவில்லையே!
வலி
ஈர மெழுகு கையில் பட்டது
முழங்கை சுவற்றில் பட்டது
விழித்திரையில் முள் பட்டது
வலிக்கவில்லை..
நீ என்னை பார்த்தும்
பேசாமல் போனாய்
ரணமாய் வலிக்குதடி.
தேடல் பொருள்
உலகபறவையாகி பறக்கிறேன்
உலகமறிய தேடுகிறேன்
உள்ளம் தன்னை மறக்கிறேன்
உவகையோடு தேடுகிறேன்.
தேடி தேடி திரிகிறேன்
தேடல் தீரவில்லை
தேடும் பொருள்
யாதென தெளியவில்லை
இஃதென சொல்லுமளவு
யாரும் அறியவில்லை
பிறை போல தேடல்
வளர்கிறது
இரவு நிழல் போல்
தொலைகிறேன்
மனம் -
மயிலிறகாகி காற்றில் கலக்கிறது
மலரிதழாகி மண்ணில் புதைகிறது
மழைத்துளியாகி கடலில் தொலைகிறது
பிரபஞ்ச தேவதை பாடல் இசைகிறாள்
“நிதம் தேடும் மனமே தேடல் பொருள்”





