இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக பெப்ரவரி, 2006

அன்பு

நீரின்றி அமையாது
இவ்வுலகு-
அன்பின்றி மடியும்
இவ்வுலகு.

இயற்கை

பூமியை
சுற்றி வரும்
வெள்ளை காற்று
-வெண்மேகம்.

இயற்கை

மழை மகளின்
அலைபாயும்
வெள்ளை கூந்தல்
-மலையருவி.

இயற்கை

நம்மை தேடி
ஒடி வரும்
இறைவனின்
ஆனந்த கண்ணீர்
-அலை.

இயற்கை

இறைவனின்
பனித்த
கண்கள்
-கடல்.

இயற்கை

தன் ஆயிரம்
கரங்களை விரித்து
நம்மை
எல்லா வகையிலும்
காக்கும் கடவுள்
-மரம்.

இயற்கை

நீரின்
பிரமாண்டமான
நடனம்
-மழை.

பழைய வரவுகள் »