இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக ஏப்ரல், 2009

தனிமை

தனிமை
சில நேரங்களில் அழுகை தரும்
சில நேரங்களில் ஆற்றல் தரும்

புண் செய்தாய்..

முட்கள் தேவையில்லை
உன் சொற்களே போதும்
என்னை காயப்படுத்த..

மழைத்தாய்

கோடையின் வெயிலில்
தினம் துவண்டு போனேன்
ஆதரவாய் மேகங்கள்
கறுத்தன -
நீ வருவாய் என
சிறு செடியை நட
கையில் ஏந்தினேன்
மழைத்தாயவள்
நீ வந்தால்
சிறு வித்தும் முளைக்கும்
என் மனமும் குளிரும்,

வேண்டுதல்

உவகை தா
உற்சாகம் தா
உழைப்பு தா
உயர்வு தா
உரிமை தா
உறவு தா
உணர்வு தா
உலகம் தா
உன்னை மறக்கும்
உள்ளம் மட்டும்
தந்துவிடாதே!

என் காதல் இசை

தேடி தேடி களைத்த பின்னும்
காதல் விடவில்லை
நாடி நாடி பருகிய பின்னும்
ஆசை விடவில்லை
ஓடி ஓடி ஒளிந்தாலும்
அகப்பட்டு கொள்கிறாய்
நான் வாடி விடாமல்
என்னை உயிர் பெற செய்கிறாய்

என் நிழலாய் பின்தொடர்கிறாய்
என்னுலகம் மறக்க செய்கிறாய்
என்னுள்ளே தொலைய செய்கிறாய்
எனை மறந்து சிரிக்க செய்கிறாய்
எப்போதும் நினைவில் நிற்கிறாய்
என் காதல் நீயன்றி வேரில்லை.

நீதானே..

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே!
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே!
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே!
சில நினைவுகள் நினைவுகள் தான் மூள்கா மூள்காதே!

நீதானே.. நீதானே.. என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே.. நீதானே.. என் இமைகளை நீவினாய்

நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
என் விழியின் கறுமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே!
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே!
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே!
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே!

உன்மைகள் சொல்வதும்
உண்ர்ச்சியை கொள்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே…….

நீ தேட தேட ஏன் தொலைகிறாய்?
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்!
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்.
இதய சதுக்கம் நடுங்குதே!
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே!
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே!

ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே…….

படம் – சர்வம்