இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக பதுமையின் கவிதைகள்

வானுலகு

வண்ணவில் ஓடம்
அதில்
சின்ன கொடியும்
மின்னல் துடுப்பும்

மேக காடு
அதில்
ஒவ்வொரு மரமும்
ஒவ்வொரு உரு.

மழை கனிகள்
ஈயும் போது
மேள தாளம்
கும்மாளம்.

நட்சத்திர மீன்கள்
பிடித்து
சூரிய குளத்தில்
சேமித்தாள்.

பாதி இரவுகள்
நட்சத்திரங்கள் தொலைந்தன
மீதி இரவுகள்
நட்சத்திரங்கள் மீண்டன.

களவு செய்தது
நிலா கள்ளன்
திருந்த செய்தது
வானவள் உள்ளம்.

மாய மின்மினி

கண்டங்கள் தாண்டி பறக்கும் விமானமல்ல
கிரகங்கள் கடந்து பாய்ந்து செல்லும் விண்கல்லல்ல
யுகங்களை ஊடுறுவி பார்வையிடும் பிரம்மனுமல்ல
கண்சிமிட்டிடும் நேரத்தில் மின்னலாய் மீண்டு
கைவிரல்களுக்குள் ஒளிந்துக்கொள்ளும் என் பிரிய
மாய மின்மினி.

தூவி..

வண்ணம் தூவி வரைந்தனை..

எண்ணம் யாவும் நிறைந்தனை..

வாசல் தாண்டும் முன்னரும்..

வாசல் கடந்த பின்னரும்..

உன் இருப்பை உணர்த்தினை.

ஒவ்வொரு அனுவிலும் ஆச்சரியம்

பேரண்டம் தாண்டியும் ஆச்சிமை.

தனிமை

தனிமை
சில நேரங்களில் அழுகை தரும்
சில நேரங்களில் ஆற்றல் தரும்

புண் செய்தாய்..

முட்கள் தேவையில்லை
உன் சொற்களே போதும்
என்னை காயப்படுத்த..

மழைத்தாய்

கோடையின் வெயிலில்
தினம் துவண்டு போனேன்
ஆதரவாய் மேகங்கள்
கறுத்தன -
நீ வருவாய் என
சிறு செடியை நட
கையில் ஏந்தினேன்
மழைத்தாயவள்
நீ வந்தால்
சிறு வித்தும் முளைக்கும்
என் மனமும் குளிரும்,

வேண்டுதல்

உவகை தா
உற்சாகம் தா
உழைப்பு தா
உயர்வு தா
உரிமை தா
உறவு தா
உணர்வு தா
உலகம் தா
உன்னை மறக்கும்
உள்ளம் மட்டும்
தந்துவிடாதே!
பழைய வரவுகள் »