இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்புக்காக பதுமையின் கவிதைகள்
வானுலகு

வண்ணவில் ஓடம்
அதில்
சின்ன கொடியும்
மின்னல் துடுப்பும்
மேக காடு
அதில்
ஒவ்வொரு மரமும்
ஒவ்வொரு உரு.
மழை கனிகள்
ஈயும் போது
மேள தாளம்
கும்மாளம்.
நட்சத்திர மீன்கள்
பிடித்து
சூரிய குளத்தில்
சேமித்தாள்.
பாதி இரவுகள்
நட்சத்திரங்கள் தொலைந்தன
மீதி இரவுகள்
நட்சத்திரங்கள் மீண்டன.
களவு செய்தது
நிலா கள்ளன்
திருந்த செய்தது
வானவள் உள்ளம்.
மாய மின்மினி

கண்டங்கள் தாண்டி பறக்கும் விமானமல்ல
கிரகங்கள் கடந்து பாய்ந்து செல்லும் விண்கல்லல்ல
யுகங்களை ஊடுறுவி பார்வையிடும் பிரம்மனுமல்ல
கண்சிமிட்டிடும் நேரத்தில் மின்னலாய் மீண்டு
கைவிரல்களுக்குள் ஒளிந்துக்கொள்ளும் என் பிரிய
மாய மின்மினி.
தூவி..
வண்ணம் தூவி வரைந்தனை..
எண்ணம் யாவும் நிறைந்தனை..
வாசல் தாண்டும் முன்னரும்..
வாசல் கடந்த பின்னரும்..
உன் இருப்பை உணர்த்தினை.
ஒவ்வொரு அனுவிலும் ஆச்சரியம்
பேரண்டம் தாண்டியும் ஆச்சிமை.
மழைத்தாய்




