இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - பயணம்
தொடரும்…

பயணிகள் மாறி போனாலும்..
பயணங்கள் முடிவதில்லை..
பயணித்த பாதை வெவ்வேறானாலும்..
பாதைகள் முடிந்து போவதில்லை..
வாழ்க்கையின் தேடல்கள் தொடரும்…
நாடோடி

முடிவிலா பயணம் செல்ல
தொலைதூர குறிக்கோள் கொண்டு
சேரும் இடமறியாமல்
துணிந்தே புறப்பட-
பாதைகள் பலவாகும்
நேரம் மிகக்குறைவாகும்
இதையறியாமல்-
சொல்வதை கேளாத மனம் அதனில்
ஓயாத எண்ணங்கள் பல கொண்டு
அன்பெனும் ஆயுதம் அதை கொண்டு
அழிவில்லாத தூய ஆத்மா அதனைத்
தேடி பயணமது தொடர்ந்தது.
