இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - மோகன்
ராஜ ராஜ சோழன் நான்..
ராஜ ராஜ சோழன் நான்.
எனை ஆளும் காதல் தேசம் நீதான்.
பூவே! காதல் தீவே!
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே!
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே!
உன் ராக மோகனம், என் காதல் வாகனம்.
செந்தாமரை, செந்தேன்மழை, என் ஆவி நீயே தேவி.
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே!
சங்கீத மேகம்..
சங்கீத மேகம், தேன் சிந்தும் நேரம்.
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்.
நாளை என் கீதமே!!
எங்கும் உலாவுமே!!
என்றும் விழாவே என் வாழ்விலே.
போகும் பாதை தூரமே,
வாழும் காலம் கொஞ்சமே.
ஜீவசுகம் பெற நாத நதியினில் நீ நீந்தவா..
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.
கேளாய் பூமனமே!!
உள்ளம் என்னும் ஊரிலே,
பாடல் என்னும் தேரிலே,
நாளும் கனவுகள் ராஜபவனிகள் போகின்றதே!
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அனையா விளக்கே!
கேளாய் பூமனமே!!
வா வெண்ணிலா..
வா வெண்ணிலா..
உன்னைத்தானே..
வானம் தேடுது.
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரைப்போட்டு உன்னை மறைத்தாலே பாவம்.
ஒருமுறையேனும்
திருமுகம் காணும்
வரம் தர வேண்டும்.
எனக்கது போதும்.
மலர்போன்ற பாதம் நடக்கின்ற போது.
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்.
நிலாவே வா..
முள்வேலியா? முல்லைப்பூவா?
சொல்லு கொஞ்சம் நில்லு.
பூந்தேனே!! நீதானே!!
சொல்லில் வைத்தாய் முள்ளை..
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே..
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே..
ஆகாயம் காணத மேகம் ஏது கண்ணே…